முந்தைய முயற்சி

Tuesday, 22 March 2011

ஜெயலலிதா பிரச்சாரத் திட்டம்:தினத்தந்தியில் முழுமையாக வெளியீடு

அதிமுக பொதுச் செயலரின் 18 நாட்கள் பிரச்சார சுற்றுப் ப்யணம் குறித்த அறிக்கை முழுமையாக தினத் தந்தியில் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை தினமலர், தினகரன், தினமணியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் நிரம்பிய அறிக்கைகளை எடிட் செய்தும் சுருக்கமாகவும் வெளியிடுவதை விடவும், விரிவாக வெளியிடுவதுதானே சரி ?எங்கள் ஆசிரியர்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.

 அடுத்த 18 நாட்களில் ஜெயலலிதா எங்கே இருக்கின்றார் என்பதைத் தேட இது போன்ற அறிவிப்புகள் பெருமளவில் உதவும்.


அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
ஜெயலலிதா 24-ந் தேதி முதல் தேர்தல் பிரசாரம்
திருச்சியில் தொடங்குகிறார்


சென்னை, மார்ச்.22-

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 24-3-2011 முதல் 11-4-2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து 18 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருச்சி

24.3.2011 (வியாழக்கிழமை): திருச்சி பகுதி- மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.

25.3.2011 (வெள்ளிக்கிழமை): திருச்சி பகுதி- கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.

கந்தர்வகோட்டை

26.3.2011 (சனிக்கிழமை): திருச்சி பகுதி - கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் ïனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.

27.3.2011 (ஞாயிற்றுக்கிழமை): கந்தர்வகோட்டை பகுதி: கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

28.3.2011 (திங்கட்கிழமை): தஞ்சாவூர் பகுதி - திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

தூத்துக்குடி

29.3.2011 (செவ்வாய்க்கிழமை): விழுப்புரம் பகுதி - விழுப்புரம், திருவண்ணாமலை.

30.3.2011 (புதன்கிழமை): வேலூர் பகுதி - வேலூர், காஞ்சீபுரம்.

1.4.2011 (வெள்ளிக்கிழமை): கன்னியாகுமரி பகுதி - கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி.

2.4.2011 (சனிக்கிழமை): தூத்துக்குடி பகுதி - தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.

3.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): கம்பம் பகுதி - கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.

4.4.2011 (திங்கட்கிழமை): பரமக்குடி பகுதி- முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

திருப்பூர்

5.4.2011 (செவ்வாய்க்கிழமை): உதகமண்டலம் பகுதி - உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், நீலாம்பூர், காளப்பட்டி.

6.4.2011 (புதன்கிழமை): திருப்பூர் பகுதி - திருப்பூர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

7.4.2011 (வியாழக்கிழமை): கோபிசெட்டிப்பாளையம் பகுதி - கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு.

8.4.2011 (வெள்ளிக்கிழமை): நாமக்கல் பகுதி - நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

கிருஷ்ணகிரி

9.4.2011 (சனிக்கிழமை): கிருஷ்ணகிரி பகுதி - காரிமங்கலம், பைïர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஓசூர்.

10.4.2011 (ஞாயிற்றுக்கிழமை): சென்னை பகுதி - மயிலாப்பூர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கார் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மிïர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்-கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

சென்னை

11.4.2011 (திங்கட்கிழமை): சென்னை பகுதி - அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, என்.எம்.கே. தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்பூர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் என்-1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 அதிமுக வேட்பாளர் பட்டியலைப் போலவே தேமுதிக வேட்பாளர் பட்டியலும், தினத்தந்தியில் துல்லியமாகவும், தினமலரிலும், தினமணியிலும் சுருக்கமாகவும் தரப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது
தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் அறிவிப்பு
வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டனர். விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சென்னை, மார்ச்.22-

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

20 மணி நேரம் பேச்சுவார்த்தை

தே.மு.தி.க. போட்டியிடும் 41 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பதற்காக இரு தரப்பினரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு சில தொகுதிகளில் இரு கட்சிகளுமே தீவிர ஆர்வம் காட்டியதால் இழுபறி நிலை ஏற்பட்டு விடிய, விடிய பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போனது.

2 நாட்களாக சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் பேசிய பிறகு நேற்று முன்

தினம் இரவில் உடன்பாடு ஏற்பட்டது.


ஜெயலலிதா அறிவித்தார்


இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க.வின் 160 தொகுதிகளுக்கான திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியலையும் அறிவித்தார்.


இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டன. அவை வருமாறு:-


1. விருத்தாசலம், 2. திருக்கோவிலூர், 3. ரிஷிவந்தியம், 4. திருச்செங்கோடு, 5. ஆரணி, 6. செங்கம் (தனி), 7. பட்டுக்கோட்டை, 8. கும்மிடிப்பூண்டி, 9. திருத்தணி, 10. சோளிங்கர்.


11. தர்மபுரி, 12. கங்கவல்லி (தனி), 13. மதுரை மத்தி, 14. கூடலூர் (தனி), 15. திருவாடானை, 16. திட்டக்குடி (தனி), 17. குன்னம், 18. மயிலாடுதுறை, 19. திருவெறும்பூர், 20. சேலம் (வடக்கு).


21. ராதாபுரம், 22. சூலூர், 23. விருகம்பாக்கம், 24. ஓசூர், 25. லால்குடி, 26. பேராவூரணி, 27. செங்கல்பட்டு, 28. எழும்பூர் (தனி), 29. செஞ்சி, 30. ஈரோடு (கிழக்கு).


31. கம்பம், 32. சேந்தமங்கலம், 33. திருப்பரங்குன்றம், 34. விருதுநகர், 35. ஆத்தூர், 36. பண்ருட்டி, 37. அணைக்கட்டு, 38. பத்மநாபபுரம், 39. வேப்பனஹள்ளி, 40. மேட்டூர், 41. ஆலந்தூர்


மேற்கண்ட 41 சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஆனது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.


மேற்கண்டவாறு அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.


ஒப்பந்தத்தில் விஜயகாந்த் கையெழுத்து


இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே பொது தேர்தல் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு இந்த 41 தொகுதிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.


ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டிருந்தனர்.


41 வேட்பாளர்கள்


தொகுதிகள் முடிவானதை தொடர்ந்து விஜயகாந்த் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டங்களாக வெளியிட்டார்.


கடந்த தேர்தலில் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூரிலும், நடிகர் அருண்பாண்டியன் பேராவூரணியிலும் போட்டியிடுகிறார்கள்.


பட்டியல் விவரம்


விஜயகாந்த் அறிவித்த முதல் பட்டியலில் 11 பேரும், 2-வது பட்டியலில் 24 பேரும், 3-வது பட்டியலில் 6 பேரும் இடம் பெற்று இருந்தனர். பட்டியல்

விவரம் வருமாறு:-



1. விருதுநகர்- க.பாண்டியராஜன் (தேர்தல் பணி செயலாளர்)

2. மதுரை மத்தி- ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க. மாநில பொருளாளர்)

3. ஈரோடு கிழக்கு- வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்)

4. கம்பம்- பி.முருகேசன் (துணை செயலாளர்)

5. பட்டுக்கோட்டை- என்.செந்தில் குமார் (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்)

6. ராதாபுரம்- மைக்கேல் எஸ்.ராயப்பன் (உயர் மட்டக்குழு உறுப்பினர்)

6. சேலம் வடக்கு- ஆர்.மோகன்ராஜ் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்)

7. திருக்கோவிலூர்- எல்.வெங்கடேசன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்)

9. ஆத்தூர்- எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியம் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

10. கூடலூர் (தனி)- எஸ்.செல்வராஜ் (நீலகிரி மாவட்ட செயலாளர்)

11. சேந்தமங்கலம்- சாந்தி ராஜமாணிக்கம் (நாமக்கல் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்)

12. ரிஷிவந்தியம்-விஜயகாந்த் (நிறுவன தலைவர்).

13. ஆலந்தூர்-பண்ருட்டி எஸ்.ராமசந்திரன்(அவைத்தலைவர்)

14. செங்கம் (தனி) -டி.சுரேஷ் குமார்(துணை செயலாளர்)

15. எழும்பூர்(தனி)-கு.நல்லதம்பி (மாநில இளைஞரணி துணைசெயலாளர்)

16. பண்ருட்டி - பி.சிவக் கொளுந்து(கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

17. சூலூர் - கே.தினகரன் (கோவை தெற்கு மாவட்ட செயலாளர்)

8. குன்னம் - துரை காமராஜ்(பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)

19. மேட்டூர் - எஸ்.ஆர்.பார்த்திபன்(சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்)

20.தருமபுரி-ஏ.பாஸ்கர்(தர்மபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

21. ஆரணி - ஆர்.மோகன் என்ற மோகனம்

22. பேராவூரணி-சி.அருண் பாண்டியன்(நடிகர்)

23. சோளிங்கர் -பி.ஆர்.மனோகர்(அரக்கோணம் நகர செயலாளர்)

24. திருவாடனை-முஜிபுர் ரகுமான்(மாநில செயற்குழு உறுப்பினர்)

25. லால்குடி-செந்தூர்ரேஸ்வரன்(மாநில மாணவரணி செயலாளர்)

26. திருப்பரங்குன்றம் - ஏ.கே.டி.ராஜா(மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்)

27. அணைக்கட்டு - வி.பி. வேலு(வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்)

28. திருவெறும்பூர்-எஸ்.செந்தில்குமார்.(திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்)

29. கெங்கவல்லி- ஆர். சுபா (சேலம் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலாளர்)

30. ஓசூர்-ஜான்சன்(கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்)

31. செஞ்சி-சிவா என்ற சிவலிங்கம்(விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்)

32. மயிலாடுதுறை-பால அருட்செல்வம்(நாகை வடக்கு மாவட்ட செயலாளர்)

33. செங்கல்பட்டு-டி.முருகேசன்(காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்)

34. வேப்பனஹள்ளி-எஸ்.எம்.முருகேசன்(மாநில பொதுக்குழு உறுப்பினர்)

35. விருத்தாசலம்-முத்துகுமார்(விருத்தாசலம் ஒன்றிய செயலாளர்)

36.விருகம்பாக்கம்-ப.பார்த்தசாரதி (தலைமை நிலைய செயலாளர்)

37.கும்மிடிப்பூண்டி-சி.எச்.சேகர் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

38.பத்மநாபபுரம்-எஸ்.ஆஸ்டின் (துணை செயலாளர்)

39.திருத்தணி-மு.அருண் சுப்பிரமணியம் (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

40.திருச்செங்கோடு-பி.சம்பத்குமார் (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

41.திட்டக்குடி (தனி)-தமிழ்அழகன் (நல்லூர் ஒன்றிய செயலாளர்)

ஒத்துழைப்பு

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும் கழக மற்றும் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தந்து பொது மக்களின் ஆதரவை பெற்று அவர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment