ஜூனியர் விகடன் 13 04 2011 நாளிட்ட இதழில் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1. ஆறாவது முறையும் அவரே ஆள்வார் என்ற தலைப்பில் கே எஸ் ராதா கிருஷ்ணன், திமுக ஆட்சி ஏன் தொடரவேண்டும் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அடுத்து "கருணாநிதி ஆட்சி ஏன் மாற வேண்டும் ?", என்ற தலைப்பில் பழ கருப்பையாவின் காரசாரமான வாதமும் இடம் பெற்றுள்ளது.
தமிழில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகளில் நியாயமானதும் காரசாரமானதுமான பழ கருப்பையாவின் வாதங்களும் கட்டுரையமைப்பும் வாசிக்கத் தூண்டுபவை. தமிழ் நாளிதழ் வட்டாரத்தில் காணப்படாத வடிவம் இது.
தமிழில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகளில் நியாயமானதும் காரசாரமானதுமான பழ கருப்பையாவின் வாதங்களும் கட்டுரையமைப்பும் வாசிக்கத் தூண்டுபவை. தமிழ் நாளிதழ் வட்டாரத்தில் காணப்படாத வடிவம் இது.
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?
பழ.கருப்பையா
''கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லிதிகார் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியவர்! அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல... கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலைதான்!உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும்


இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும் ராஜபக்ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கியபோதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!
அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை... கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை... அம்மாவை அரசியலில் வளர்த்தது!
ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல... தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை... 'நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!

அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும் மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு... தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!
அம்மாவின் காலத்தில்,




அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம்


அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!
இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன்

ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த... ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி... தொலைய வேண்டுமா? வேண்டாமா?
மக்கள் சொல்வார்கள்!
சந்திப்பு: த.கதிரவன்
Courtesy : Junior Vikadan dated 13 04 2011 p.62-63 , Sourced from : http://unarchitamilan.blogspot.com/2011/04/blog-post_787.html
1 comment:
இந்த ஆளா நாகரீகமாக எழுதுபவன்? அண்மையில் தினமணியில் தி.மு.கழகத் தலைவரை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தான்.அத்ன் முடிவில் ' மலத்தை மொய்க்கும் ஈக்கள்' என்று தி.மு.கழகத் தலைவரையும், அவரை சுற்றி இருப்போரையும் குறிக்கும் வகையில் மிகக் கேவலமாக எழுதி இருந்தான்.த்தூ
Post a Comment