முந்தைய முயற்சி

Friday, 8 April 2011

கோவையில் ஜெயலலிதா கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளாததில் தினமலருக்கு மட்டும் அதீத வருத்தம் ஏன்?

கோவையில் புதன் கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்துகொள்ள வில்லை. அவர் வரவில்லை என்பதை பல பத்திரிகைகள் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், தினமலர் மட்டும் இந்த விஷயத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து முதற்பக்க முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. திட்டமிட்ட புறக்கணிப்பு என்று கட்டம் கட்டி ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட அரசியல் இயக்கங்கள் மீது மட்டும் அதீத அக்கறை காட்டுவதும், அதீத முக்கியத்துவம் கொடுத்து முதன்மைப் படுத்துவதும், பிற செய்திகளுக்கு உரிய முக்கியத்துவத்தை ம்றுப்பதற்குச் சமமாகும்.
தினமலர் ஐ ஜே கே தலைவர் பச்சமுத்துவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்துவருகின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் போதுமான சான்றுகள் கிடைத்து வருகின்ற்ன. இது அப்ப்ட்டமான நெறிமீறல் என்றே கருதப் படவேண்டும்.

No comments:

Post a Comment