Sunday, 10 April 2011

மதிமுக நிலை குறித்து தினம்லரின் தொடர்ச்சியான கிண்டல்

எது செய்தி ? எது விமர்சனம் ? எது கருத்துரை  என்று வேறுபடுத்திப் புரிந்துகொள்ள முடியாத அளவு குழப்பமான நிலையிலேயே வெளியிடுவது தமிழ் இதழ்கள் பலவற்றின் வழக்கமாகி வருகின்றது. இதில் முதலிடம் பிடிக்கும் வெகுஜன நாளிதழ் தினமலர் என்பது மீண்டும் மீண்டும் இப்பகுதியில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது.
10 04 2011 அன்று வெளியான தினமலர் இதழில், "என்ன செய்யப் போகிறது வெண்கலப்பானை", என்ற தலைப்பில் ஒரு  செய்தி (?) வெளியாகியுள்ளது.
மீண்டும் மீண்டும் மதிமுக குறித்து தகவலை வெளியிடுவது, அதற்கு உரிய விளக்கங்க்ள் அளிக்கப்பட்டால், அதை வெளியிட ம்றுப்பது என்று தொடர்ந்து செயல்பட்டுவரும் தினமலர் நாளிதழ், இச்செய்தியில் எவரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு கருத்துரையை செய்தியாகத் தோன்றுமாறு வெளியிட்டுள்ளது.

No comments: