காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை. தேக்க நிலை தொடர்கின்றது என்று சொன்ன கதையையே தமிழ்ப் பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. இந்த விஷய்ம் பற்றி தினகரன் எந்தச் செய்தியும் வெளியிடுவதில்லை.
தினமலரில் 13 03 2011 ஞாயிறு அன்று வெளிவந்த இது தொடர்பான செய்தியைக் கவனிப்போம் :
காங்.,கிற்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் நீடிக்கிறது முட்டுக்கட்டை
சென்னை : காங்கிரஸ் கேட்கும் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., குழுவினர் சம்மதித்து விட்டாலும், சில தொகுதிகளை ஒதுக்க மறுப்பதால், காங்கிரசுக்கான தொகுதிகளை முடிவு செய்வதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. காங்கிரசில் உள்ள பல கோஷ்டி தலைவர்களும், கோட்டா சிஸ்டத்தில், தங்களுக்கு பிடித்தமான தொகுதிகளை பெற்றுத் தர வேண்டும் என, ஐவர் குழுவிடம் நிபந்தனை விதிப்பதும், பிரச்னை முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பதற்கு காரணம்.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை போட்டியிட்ட, 48 தொகுதிகளையும் அப்படியே ஒதுக்க தி.மு.க., முன் வந்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், 38 பேரில், ஆறு பேர் மட்டும், தொகுதி மறு சீரமைப்பு அடிப்படையில் வேறு தொகுதிகளுக்கு மாறும் நிலைமை உருவாகியுள்ளது.
அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தொகுதிகளைப் பெறுவதில் ஐவர் குழுவினர் தீவிரம் காட்டுகின்றனர். அத்துடன், இம்முறை கூடுதலாக பெற்றுள்ள, 15 தொகுதிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும் காங்., குழுவினர் விரும்புகின்றனர். அந்த அடிப்படையிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
புதிதாக கிடைத்துள்ள 15 தொகுதிகளில், 10 தொகுதிகள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் உத்தரவின்படி, இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதற்காக, 10 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தேர்வு செய்து கொடுத்துள்ளார்.
இதுதவிர மீதமுள்ள தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை தங்கள் கோஷ்டிக்கு ஒதுக்க வேண்டும் என, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், பிரபு உள்ளிட்ட கோஷ்டித் தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு தேவையான தொகுதிகளை கண்டிப்பாக பெற்றுத் தர வேண்டும் என, நிபந்தனை விதித்து, அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடப்பதாலும், முடிவு காணப்படவில்லை.
தொகுதிகளை அடையாளம் காணுவதை இறுதி செய்வதற்காக நேற்று காலை, 8.40 மணி முதல், 11.15 மணி வரை, சத்தியமூர்த்திபவனில் ஐவர் குழுவினர், தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருந்தனர். அறிவாலயத்திலிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதிருப்தி அடைந்த வாசன், சிதம்பரம் இருவரும் தனது காரில் ஏறி வீட்டிற்கு பறந்தனர். உடனே அவரது ஆதரவாளர்களும் அவர்களின் கார்களின் பின்னால் அணிவகுத்து சென்றனர்.
மாலையில் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.,வினர் அழைப்பர் என்ற நம்பிக்கையுடன் ஜெயக்குமார் மட்டும் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். மற்ற நான்கு தலைவர்களும் வரவில்லை. அதனால், காத்திருந்து பார்த்து விட்டு, ஜெயக்குமாரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். எப்போது அழைப்பு வரும் ஐவர்குழு காத்திருப்பதால், தொகுதி அடையாளம் காணும் முடிவில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=204721
தொகுதிகள் அடையாளம் காண்பது தொடர்பான
தி.மு.க-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தாமதம் - இன்று நடைபெறும் என்று எதிர்பார்ப்பு
சென்னை, மார்ச்.13-
தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான தி.மு.க-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெறவில்லை. இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.
தி.மு.க. கூட்டணி
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களும், பா.ம.க.விற்கு 30 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 121 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விடுதலைச்சிறுத்தைகள், பா.ம.க., இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை அடையாளம் கண்டு தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளது.
பேச்சு நடத்த வரவில்லை
தற்போது காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளிலேயே இழுபறி நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பேச்சு நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தி.மு.க. குழுவினருடன் பேச்சு நடத்துவதற்கு வருவோம் என்று கே.வி. தங்கபாலு கூறியிருந்தார். ஆனால் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பேச்சு நடத்த வரவில்லை.
குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது திங்கட்கிழமைக்குள் தொகுதி பங்கீட்டு பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும் என்று தி.மு.க. முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.
புன்னகையுடன் வந்த கருணாநிதி
இந்த நிலையில் நேற்று அறிவாலயம் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, நேர்காணலுக்கு வந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை முதல்-அமைச்சர் கருணாநிதி நடத்தினார்.
மாலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=633039&disdate=3/13/2011
தினமணி வெளியிட்டுள்ள செய்தி இது :
தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்: திமுக- காங்கிரஸ் பேச்சில் முட்டுக்கட்டை நீடிப்பு
சென்னை, மார்ச் 12: யாருக்கு எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்வதில் திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் சனிக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வரவில்லை.
சில குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதால் திமுக கூட்டணி நடவடிக்கைகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இரு அணிகளிலும் சமரசம் ஏற்படாததால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தொகுதி ஒதுக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகள் எவை என்று அடையாளம் காண்பது தொடர்பாக வியாழக்கிழமையில் இருந்து பேச்சு நடந்து வருகிறது. மூன்று நாள்கள் முடிந்தவிட்ட நிலையிலும் இதுவரை உடன்பாடு காணப்படவில்லை.
இளைஞர் காங்கிரஸýக்காக வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை கொண்ட பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தொகுதிகளில் 15 தொகுதிகளையாவது கேட்டுப் பெறவேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்து உத்தரவு என்று கூறப்படுகிறது.
இதில் பல தொகுதிகள் இப்போது திமுக மற்றும் பாமக வசம் உள்ள தொகுதிகள் என்று தெரிகிறது.
தொகுதி மறுவரையறையால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 48 தொகுதிகளில் 5 தொகுதிகளை இழந்துவிட்டது. இதனால் அந்தத் தொகுதிகளின் அருகில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்தத் தொகுதிகள் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள அல்லது இப்போது திமுக வசம் உள்ள தொகுதிகளாகும். இதுதான் முட்டுக்கட்டை நீடிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
குறிப்பாக அமைச்சர் நேருவின் தொகுதியான திருச்சி, அமைச்சர் பெரிய கருப்பன் தொகுதியான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், அமைச்சர் பரிதி இளம்வழுதி தொகுதியான எழும்பூர், அமைச்சர் கே.பி.பி. சாமி தொகுதியான திருவொற்றியூர், வேளச்சேரி, திட்டக்குடி, திருத்தணி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் அண்ணா அறிவாலயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐவர் குழுவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு அறிவாலயம் செல்லாமல் கலைந்து சென்றுவிட்டனர்.
காங்கிரஸ் ஐவர் குழுவினர் அறிவாலயம் வராதது திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை மாலை அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. 99.9 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்று கூறினார். எந்தெந்த தொகுதிகள் உங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டபோது, அதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
உயர்நிலைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் முடிவான பிறகு முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுக அணியில்: அதிமுக தரப்பில் இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளும், ம.தி.மு.க. 21-க்கு குறையாத தொகுதிகளும் எதிர்பார்ப்பதாக அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அணியில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி 182 தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக 144 தொகுதிகளை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதி 38 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் இந்த மூன்று கட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 19-ம் தேதி வரை பொறுத்திருப்பதாகவும் அதுவரை அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் போக்கால் மதிமுக மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=389593&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி இது (13 03 2011)
DMK-Congress talks hit roadblock on seat-sharing
T Muruganandham
Express News Service
CHENNAI: The DMK-Congress talks on identification of constituencies hit a roadblock on Saturday with Congress insisting on certain seats.
The five-member team of the Congress failed to turn up at DMK headquarters on Saturday for the fifth round of talks as promised by TNCC president KV Thangkabalu on Friday evening. And no one in the DMK spoke about the reason for this failure to turn up.
A senior Congress leader, however, told Express that the list of seats identified for the party after talks with the DMK had been sent to New Delhi for approval. “Next time we go to Anna Arivalayam, it will be to sign the agreement, and not for anything else, as 99 per cent of issues are settled.
“We asked the DMK to change only a couple of the seats that they offered to us. Apart from that everything has been finalised”, the leader who spoke on condition of anonymity said.
The leader further said as AICC general secretary Ghulam Nabi Azad was busy with the Assam election meeting, approval could not be obtained on Saturday itself. The Congress constituencies list would be announced on Sunday or Monday.
Meanwhile, the DMK has advanced interviews of aspirants by one day — from March 14 to March 13. The DMK may announce its list within a couple of days.
http://expressbuzz.com/states/tamilnadu/dmk-congress-talks-hit-roadblock-on-seat-sharing/255841.html
Rahul list the hitch?
G Babu Jayakumar (Express News Service)
CHENNAI: With the talks hitting a cul de sac the question being asked is, what exactly is the glitch? No one wants to name the constituencies in question, but Congress functionaries say a list given by Rahul Gandhi led the committee to dig in its heels. The DMK, however, doesn’t want to part with some of the seats on Rahul’s list as they are DMK strongholds, held by senior DMK men.
But these are also seats the Congress lost in the delimitation, and it does not want to go far from its support base. Ostensibly, Velachery and Thitakarai are the problem but no one believes that.
The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally.
http://expressbuzz.com/states/tamilnadu/rahul-list-the-hitch/255840.html
தி இந்து நாளிதழில் இது தொடர்பான பேச்சுவார்த்தையே நடைபெறாததால் எந்த செய்தியும் வெளியிடப் படவில்லை.
மேற்கண்ட செய்திகளை வாசித்த பின்பு ஒரு விஷயம் புலப் படும்.:
The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெட்டிச் செய்தியின் கடைசி வரியில் குறிப்பிட்டிருப்பது போல, திமுகவும் காங்கிரசும் தங்கள் தங்கள் வலுவான தொகுதிகளிலேயே நின்று ஜெயிக்க விரும்புகின்றன. ஒருகட்சி மற்றொரு கட்சியை நம்பி இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. எனவே, யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடிக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கு, ஆய்வுரைகளின் அடிப்படையிலோ, கொஞ்சம் துணிவுடன் சில அப்பட்டமான உண்மை முடிவுகளையோ தைரியமாக அறிக்கையிடும் பத்திரிகையாளர்களோ, பத்திரிகைகளோ நாளிதழ் வட்டாரத்தில் எளிதில் காண் முடிவதில்லை. அவர்கள் கழுகு, டீக்கடை பெஞ்சு, பீட்டர் மாமா, கடுகு, தராசு என்று ஏதேனும் ஒரு கிசுகிசு பகுதியின் தகவல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் தகவல்களுக்கிடையில் உள்ள உண்மைகளைத் தேடித்தேடி படித்துக் கிரக்கம் கொள்ள வேண்டிய நிலையே காணப் படுகின்றது.
தினமலரில் 13 03 2011 ஞாயிறு அன்று வெளிவந்த இது தொடர்பான செய்தியைக் கவனிப்போம் :
காங்.,கிற்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் நீடிக்கிறது முட்டுக்கட்டை
சென்னை : காங்கிரஸ் கேட்கும் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., குழுவினர் சம்மதித்து விட்டாலும், சில தொகுதிகளை ஒதுக்க மறுப்பதால், காங்கிரசுக்கான தொகுதிகளை முடிவு செய்வதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. காங்கிரசில் உள்ள பல கோஷ்டி தலைவர்களும், கோட்டா சிஸ்டத்தில், தங்களுக்கு பிடித்தமான தொகுதிகளை பெற்றுத் தர வேண்டும் என, ஐவர் குழுவிடம் நிபந்தனை விதிப்பதும், பிரச்னை முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பதற்கு காரணம்.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த முறை போட்டியிட்ட, 48 தொகுதிகளையும் அப்படியே ஒதுக்க தி.மு.க., முன் வந்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், 38 பேரில், ஆறு பேர் மட்டும், தொகுதி மறு சீரமைப்பு அடிப்படையில் வேறு தொகுதிகளுக்கு மாறும் நிலைமை உருவாகியுள்ளது.
அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தொகுதிகளைப் பெறுவதில் ஐவர் குழுவினர் தீவிரம் காட்டுகின்றனர். அத்துடன், இம்முறை கூடுதலாக பெற்றுள்ள, 15 தொகுதிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும் காங்., குழுவினர் விரும்புகின்றனர். அந்த அடிப்படையிலும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
புதிதாக கிடைத்துள்ள 15 தொகுதிகளில், 10 தொகுதிகள், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் உத்தரவின்படி, இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதற்காக, 10 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா தேர்வு செய்து கொடுத்துள்ளார்.
இதுதவிர மீதமுள்ள தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை தங்கள் கோஷ்டிக்கு ஒதுக்க வேண்டும் என, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் விரும்புகின்றனர். அதேநேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், பிரபு உள்ளிட்ட கோஷ்டித் தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு தேவையான தொகுதிகளை கண்டிப்பாக பெற்றுத் தர வேண்டும் என, நிபந்தனை விதித்து, அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடப்பதாலும், முடிவு காணப்படவில்லை.
தொகுதிகளை அடையாளம் காணுவதை இறுதி செய்வதற்காக நேற்று காலை, 8.40 மணி முதல், 11.15 மணி வரை, சத்தியமூர்த்திபவனில் ஐவர் குழுவினர், தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருந்தனர். அறிவாலயத்திலிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதிருப்தி அடைந்த வாசன், சிதம்பரம் இருவரும் தனது காரில் ஏறி வீட்டிற்கு பறந்தனர். உடனே அவரது ஆதரவாளர்களும் அவர்களின் கார்களின் பின்னால் அணிவகுத்து சென்றனர்.
மாலையில் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.,வினர் அழைப்பர் என்ற நம்பிக்கையுடன் ஜெயக்குமார் மட்டும் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார். மற்ற நான்கு தலைவர்களும் வரவில்லை. அதனால், காத்திருந்து பார்த்து விட்டு, ஜெயக்குமாரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். எப்போது அழைப்பு வரும் ஐவர்குழு காத்திருப்பதால், தொகுதி அடையாளம் காணும் முடிவில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=204721
தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தி இது :
தொகுதிகள் அடையாளம் காண்பது தொடர்பான
தி.மு.க-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தாமதம் - இன்று நடைபெறும் என்று எதிர்பார்ப்பு
சென்னை, மார்ச்.13-
தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான தி.மு.க-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெறவில்லை. இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.
தி.மு.க. கூட்டணி
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களும், பா.ம.க.விற்கு 30 இடங்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 121 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விடுதலைச்சிறுத்தைகள், பா.ம.க., இந்திய ïனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை அடையாளம் கண்டு தி.மு.க. தலைமையிடம் வழங்கியுள்ளது.
பேச்சு நடத்த வரவில்லை
தற்போது காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளிலேயே இழுபறி நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பேச்சு நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தி.மு.க. குழுவினருடன் பேச்சு நடத்துவதற்கு வருவோம் என்று கே.வி. தங்கபாலு கூறியிருந்தார். ஆனால் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பேச்சு நடத்த வரவில்லை.
குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது திங்கட்கிழமைக்குள் தொகுதி பங்கீட்டு பிரச்சினை சுமுகமாக முடிந்து விடும் என்று தி.மு.க. முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.
புன்னகையுடன் வந்த கருணாநிதி
இந்த நிலையில் நேற்று அறிவாலயம் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, நேர்காணலுக்கு வந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்த திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை முதல்-அமைச்சர் கருணாநிதி நடத்தினார்.
மாலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=633039&disdate=3/13/2011
தினமணி வெளியிட்டுள்ள செய்தி இது :
தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்: திமுக- காங்கிரஸ் பேச்சில் முட்டுக்கட்டை நீடிப்பு
சென்னை, மார்ச் 12: யாருக்கு எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்வதில் திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
தொகுதிகளை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் சனிக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வரவில்லை.
சில குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதால் திமுக கூட்டணி நடவடிக்கைகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல் அதிமுக கூட்டணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இரு அணிகளிலும் சமரசம் ஏற்படாததால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தொகுதி ஒதுக்குவதிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கான 63 தொகுதிகள் எவை என்று அடையாளம் காண்பது தொடர்பாக வியாழக்கிழமையில் இருந்து பேச்சு நடந்து வருகிறது. மூன்று நாள்கள் முடிந்தவிட்ட நிலையிலும் இதுவரை உடன்பாடு காணப்படவில்லை.
இளைஞர் காங்கிரஸýக்காக வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை கொண்ட பட்டியல் திமுகவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தொகுதிகளில் 15 தொகுதிகளையாவது கேட்டுப் பெறவேண்டும் என்பது காங்கிரஸ் மேலிடத்து உத்தரவு என்று கூறப்படுகிறது.
இதில் பல தொகுதிகள் இப்போது திமுக மற்றும் பாமக வசம் உள்ள தொகுதிகள் என்று தெரிகிறது.
தொகுதி மறுவரையறையால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 48 தொகுதிகளில் 5 தொகுதிகளை இழந்துவிட்டது. இதனால் அந்தத் தொகுதிகளின் அருகில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் அந்தத் தொகுதிகள் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள அல்லது இப்போது திமுக வசம் உள்ள தொகுதிகளாகும். இதுதான் முட்டுக்கட்டை நீடிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
குறிப்பாக அமைச்சர் நேருவின் தொகுதியான திருச்சி, அமைச்சர் பெரிய கருப்பன் தொகுதியான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், அமைச்சர் பரிதி இளம்வழுதி தொகுதியான எழும்பூர், அமைச்சர் கே.பி.பி. சாமி தொகுதியான திருவொற்றியூர், வேளச்சேரி, திட்டக்குடி, திருத்தணி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் ஐவர் குழுவினர் அண்ணா அறிவாலயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐவர் குழுவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்திவிட்டு அறிவாலயம் செல்லாமல் கலைந்து சென்றுவிட்டனர்.
காங்கிரஸ் ஐவர் குழுவினர் அறிவாலயம் வராதது திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை மாலை அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. 99.9 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது என்று கூறினார். எந்தெந்த தொகுதிகள் உங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டபோது, அதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
உயர்நிலைக் கூட்டம்: விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் முடிவான பிறகு முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுக அணியில்: அதிமுக தரப்பில் இடதுசாரிகள் மற்றும் ம.தி.மு.க. கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகளும், ம.தி.மு.க. 21-க்கு குறையாத தொகுதிகளும் எதிர்பார்ப்பதாக அந்தந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அணியில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி 182 தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக 144 தொகுதிகளை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதி 38 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் இந்த மூன்று கட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 19-ம் தேதி வரை பொறுத்திருப்பதாகவும் அதுவரை அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் போக்கால் மதிமுக மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=389593&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த செய்தி இது (13 03 2011)
DMK-Congress talks hit roadblock on seat-sharing
T Muruganandham
Express News Service
CHENNAI: The DMK-Congress talks on identification of constituencies hit a roadblock on Saturday with Congress insisting on certain seats.
The five-member team of the Congress failed to turn up at DMK headquarters on Saturday for the fifth round of talks as promised by TNCC president KV Thangkabalu on Friday evening. And no one in the DMK spoke about the reason for this failure to turn up.
A senior Congress leader, however, told Express that the list of seats identified for the party after talks with the DMK had been sent to New Delhi for approval. “Next time we go to Anna Arivalayam, it will be to sign the agreement, and not for anything else, as 99 per cent of issues are settled.
“We asked the DMK to change only a couple of the seats that they offered to us. Apart from that everything has been finalised”, the leader who spoke on condition of anonymity said.
The leader further said as AICC general secretary Ghulam Nabi Azad was busy with the Assam election meeting, approval could not be obtained on Saturday itself. The Congress constituencies list would be announced on Sunday or Monday.
Meanwhile, the DMK has advanced interviews of aspirants by one day — from March 14 to March 13. The DMK may announce its list within a couple of days.
http://expressbuzz.com/states/tamilnadu/dmk-congress-talks-hit-roadblock-on-seat-sharing/255841.html
Rahul list the hitch?
G Babu Jayakumar (Express News Service)
CHENNAI: With the talks hitting a cul de sac the question being asked is, what exactly is the glitch? No one wants to name the constituencies in question, but Congress functionaries say a list given by Rahul Gandhi led the committee to dig in its heels. The DMK, however, doesn’t want to part with some of the seats on Rahul’s list as they are DMK strongholds, held by senior DMK men.
But these are also seats the Congress lost in the delimitation, and it does not want to go far from its support base. Ostensibly, Velachery and Thitakarai are the problem but no one believes that.
The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally.
http://expressbuzz.com/states/tamilnadu/rahul-list-the-hitch/255840.html
தி இந்து நாளிதழில் இது தொடர்பான பேச்சுவார்த்தையே நடைபெறாததால் எந்த செய்தியும் வெளியிடப் படவில்லை.
மேற்கண்ட செய்திகளை வாசித்த பின்பு ஒரு விஷயம் புலப் படும்.:
The real reason seems to be that the Congress and the DMK feel nervous outside their strongholds as neither sees the other as a dependable ally என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெட்டிச் செய்தியின் கடைசி வரியில் குறிப்பிட்டிருப்பது போல, திமுகவும் காங்கிரசும் தங்கள் தங்கள் வலுவான தொகுதிகளிலேயே நின்று ஜெயிக்க விரும்புகின்றன. ஒருகட்சி மற்றொரு கட்சியை நம்பி இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. எனவே, யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதில் இழுபறி நீடிக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கு, ஆய்வுரைகளின் அடிப்படையிலோ, கொஞ்சம் துணிவுடன் சில அப்பட்டமான உண்மை முடிவுகளையோ தைரியமாக அறிக்கையிடும் பத்திரிகையாளர்களோ, பத்திரிகைகளோ நாளிதழ் வட்டாரத்தில் எளிதில் காண் முடிவதில்லை. அவர்கள் கழுகு, டீக்கடை பெஞ்சு, பீட்டர் மாமா, கடுகு, தராசு என்று ஏதேனும் ஒரு கிசுகிசு பகுதியின் தகவல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் தகவல்களுக்கிடையில் உள்ள உண்மைகளைத் தேடித்தேடி படித்துக் கிரக்கம் கொள்ள வேண்டிய நிலையே காணப் படுகின்றது.
No comments:
Post a Comment