Showing posts with label சட்டப்பேரவைத்தேர்தல் 2011. Show all posts
Showing posts with label சட்டப்பேரவைத்தேர்தல் 2011. Show all posts

Friday, 11 March 2011

ஜெயலலிதாவின் அறிக்கை: 3 நாளிதழ்கள் 3 விதமாக வெளியிடல் தினமணி: நன்று ; தினமலர் : கொஞ்சம் சொதப்பல்; தினத்தந்தி : முற்றிலும் நீர்த்துப் போகச் செய்தல்


 தயாநிதி மாறனையும், சன் டி வியையும், திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து அதிமுக பொதுச்செய்லாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையை, தினமலர், சன் டிவி, தயாநிதி மாற்ன் தொடர்பான பகுதிகளை எடிட் செய்து விட்டு, வெளியிட்டுள்ளது. தினத்தந்தி, எந்த விமர்சனப் பகுதியையும் வெளியிடாமல், யாருக்கும் பாதகமோ,  முக்ச் சுளிப்போ ஏற்படுத்தாத வகையில் எடிட் செய்து விட்டு,  சில பாதகமில்லாத பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளது..
தினகரனில் செய்தியையே காணவில்லை. தினமணி யின் செய்தி கொஞ்சம் எடிட் செய்யப் பட்டிருந்தாலும், அரசியல் ரீதியாக ஓரளவு முழுமையாக இருப்பதாகக் கொள்ளலாம்.
இங்கே மூன்று நாளிதழ்களிலும் வெளிவந்த பகுதிகளின் சொடுக்குகளைத் தருகின்றோம். சொடுக்கிப் படிக்கலாம்.
தினமலர் : காங்., - தி.மு.க., கபட நாடகம்: ஜெயலலிதா கடும் தாக்கு

தினத்தந்தி :தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும்
விலைமதிப்பற்ற வாக்கினை செலுத்த முன்வர வேண்டும்
ஜெயலலிதா வேண்டுகோள்


தினமணி :திமுகவின் நாடகம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை: ஜெயலலிதா