Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts

Wednesday, 13 April 2011

தமிழீழ விடுதலை இயக்கங்கள் மீது தினமலரின் திடீர்க் கரிசனம் ?

இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகக் கூட நடந்து கொள்வார்களா என்று எங்கள் எல்லோரையும் திகைக்க வைத்த செய்தி தினமலரில் இன்றும் நேற்றும் இடம் பெற்ற தமிழீழ் விடுதலைப் புலிகள் குறித்தவை.
திடீரென தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் நாளான இன்றும், நேற்றுமாக இரு செய்திகள் தினமலரில் இடம்பெற்றன.
இரண்டும், விடுதலைப்புலிகள் தமிழக முதல்வரிடம் தொடர்புகொண்ட நிக்ழ்வுகள் தொடர்பானவை. இந்த நிகழ்வுகள் நடந்த போது தினமலரில் இது போன்ற செய்திகள் எதுவும் வெளியிடப் படவில்லை. இப்பொழுது இந்தச் செய்திகளை வெளியிட வேண்டிய தேவையோ, சூழலோ எதுவுமே இல்லை.
தேர்தலில் வாக்களிக்கப் போகும் முன்பு, தமிழ் உணர்வாளர்களிடம், கருணாநிதி மீது கோபமும் வெறுப்பும் உருவாக்க வேண்டும் என்பது தானே இந்த இரு செய்திகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
த்மிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த தினமலரின் நிலைப்பாடு உலகறிந்தது. இப்பொழுது ஏதோ ஒரு உண்மையைக் கண்டுபிடித்து விட்டதைப்போல இந்த இரு செய்திகளை வெளியிடவேண்டியது ஏன் ?
நேற்று இன்றைய செய்திகளின் தொடர்ச்சியாக, அடுத்து ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ இது போன்று விடுதலைப்புலிகளுக்கு  ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் தினமலர் வெளியிட்டுவருமானால், இந்த எங்களின் புரிதலே தவறானது என்றாகும். மாறாக, நாளை முதல் இந்த இரு செய்திகளின் தொடர்ச்சியாக எதுவுமே இடம்பெறவில்லையென்றால், தினமலரின் வழக்கமான குறும்புகளில் இதுவும் ஒன்று என்று முடிவு கட்டத்தான் வேன்டும்.
தினமலரில் 12 04 2011, 13 04 2011 ஆகிய இரு தினங்களில் வெளிவந்த இரு செய்திகள் ;