Showing posts with label விடுதலைச் சிறுத்தைகள். Show all posts
Showing posts with label விடுதலைச் சிறுத்தைகள். Show all posts

Thursday, 10 March 2011

அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து தொடங்கியுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி குறித்து தினமலரும், தினகரனும், செய்தி எதுவும் வெளியிடாதது ஏன் ?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பணிக்குழு நியமனம் என்ற செய்தி தினமணியில் 05 03 2011 அன்று 3ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

திமுக விலகியதை விசிக வ்ரவேற்கிறது : தொல் திருமாவளவன் அறிக்கை என்ற செய்தி தினத்தந்தியில் 05 03 2011 அன்று 4 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தினமலரில்  விடுதலைச் சிறுத்தைகள் தொடர்பான இந்தச் செய்திகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது
.


தனித்து நின்றாலும் வெற்றி உறுதி
காங்கிரஸ் நிபந்தனைக்குக்
க்ட்டுப் ப்டக் கூடாது
திமுகவுக்கு வீரமணி வேண்டுகோள்
என்ற செய்தி தினத்தந்தியில் 06032011 அன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையையும் தினமலரில் காண இயலவில்லை.


ஆளும் கட்சிக்கு மட்டும் பூரண ஆதரவு. எந்த விமர்சனத்திற்கும் இடமே இல்லை. என்ற குறைகளை தினத்த்ந்தியில் காணமுடிந்தாலும், பல்வேறு தரப்பான அரசியல் இயக்கங்களுக்கான இடத்தைத் தருவதில் தினத்தந்தி முன்னணியில் இருப்பதாகவே தோன்றுகின்றது. இனி வரும் நாட்களில் இதை உறுதி செய்ய முயல்வோம்.  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஆர் நல்லக் கண்ணு  ஒரு கூட்டத்தில் பேசியதாக ஒரு செய்தி தினத்த்ந்தியில் வெளியாகியிருந்தது. அந்தத் தலைப்பு இது:


சுதந்திர இந்தியாவில் தேர்தல் சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி: பயிற்சி முகாமில் ஆர் நல்லக் கண்ணு பேச்சு   தினத்தந்தி 05 03 2011 ப்.10

அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து  தொடங்கியுள்ள  பெருந்தலைவர் மக்கள் கட்சி குறித்து தினமலரும், தினகரனும், செய்தி எதுவும் வெளியிடாதது ஏன் ?  

சரத்குமார் தலைமையில் நாடார்கள் புதிய இயக்கம் என்ற செய்தி தினமணியில் 0803 2011 அன்று முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று காமராஜர் பெயர்ல் புதிய கட்சி
அனைத்து நாடார் சமுதாய் மக்கள் இணைந்து தொடக்கம் என்ற‌
செய்தி தினத்தந்தியில் 08 03 2011 அன்று 5 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி தின்மலரிலோ, தினகரனிலோ, தி இந்துவிலோ வெளியிடப் படவில்லை.

மகளிர் தினத்தன்று கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகளிருக்காகத்  தனது அரசு செய்த சாதனைகளை கருணாநிதி அறிக்கையாக வெளியிட, அதனைத் தினகரன் அப்படியே 08 03 2011 அன்று வெளியிட்டது. (பெண்கள் முன்னேற்றத்திற்காக திமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்கள்
மகளிர் தினத்துக்கு கருணாநிதி வாழ்த்து தினகரன் 08 03 2011 ப்.5).

ஆனால், அதே நாளில்  "அதிகாரம் அளிக்கும் புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும்" என்று   உலக மகளிர் தினத்தையொட்டி  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை தினத்தந்தி மட்டுமே வெளியிட்டுள்ளது. (தினத்தந்தி 08 03 2011 ப்.12 )