Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, 9 April 2011

இலவசங்களைக் கடுமையாக விமர்சிக்கும் தொ பரமசிவனின் கட்டுரை - தி சண்டே இந்தியனில்

கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்  
இலவசங்களுக்குப் ப்ல் இளித்து கை நீட்டுபவர்களாக நம்மை மாற்ற முற்படுகிறார்கள் (த சண்டே இந்தியன் 17 ஏப்ரல் 2011 ப்.29)


பண்பாட்டு ஆய்வாளரான தொ பரமசிவனின் கட்டுரை தி சண்டே இந்தியன் இதழில் வெளியாகியுள்ளது.
"நல்ல தண்ணீர் கொடுக்க துப்பில்லை...
கல்விக் கட்டணக் கொள்ளை பற்றி இந்த அறிக்கைகள் வாய் திறக்க மறந்து போவிட்டன... ஊழலற்ற நிர்வாகம் தருவோம் என்று சொல்லும் துணிச்சல் வீரகளுக்கும் இல்லை; தலைவர்களுக்கும் இல்லை.. அநேகமாக எல்லா முன்னாள் அமைச்சர்களுமே பொறியியல் தந்தைகலாக வலம் வருகிறார்கள்.ஒருவராவது குழந்தைக் கல்விக்கான கல்விக்கூடங்களை நிறுவியதாகத் தெரிய்வில்லை....", என்று கடுமையான விமர்சனங்களை நயம்பட முன்வைக்கின்றது பரமசிவனின் கட்டுரை. தேடிப் படிக்க வேண்டிய கட்டுரை.
தமிழ் நாளிதழ் வட்டாரததில் காணவே முடியாத அற்புத வாதங்கள்.


கருணாநிதி ஆட்சி ஏன் மாற வேண்டும் ? ஜூனியர் விகடனில் பழ கருப்பையாவின் காரசாரமான வாதம்

ஜூனியர் விகடன் 13 04 2011 நாளிட்ட இதழில் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1. ஆறாவது முறையும் அவரே ஆள்வார் என்ற தலைப்பில் கே எஸ் ராதா கிருஷ்ணன், திமுக ஆட்சி ஏன் தொடரவேண்டும் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அடுத்து "கருணாநிதி ஆட்சி ஏன் மாற வேண்டும் ?", என்ற தலைப்பில் பழ கருப்பையாவின்  காரசாரமான  வாதமும் இடம் பெற்றுள்ளது.
தமிழில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகளில் நியாயமானதும் காரசாரமானதுமான பழ கருப்பையாவின் வாதங்களும் கட்டுரையமைப்பும் வாசிக்கத் தூண்டுபவை. தமிழ் நாளிதழ் வட்டாரத்தில் காணப்படாத வடிவம் இது.

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

பழ.கருப்பையா
''கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லிதிகார் சிறைச்சாலைக்கு செல்ல   வேண்டியவர்!  அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல... கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலை​தான்!
உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை. இவருக்கு ஒரு கட்சி, இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி. வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள், தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல, சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன்!
இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும்  ராஜபக்​ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கிய​போதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!
அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை... கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை... அம்மாவை அரசியலில் வளர்த்தது!
ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல... தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை... 'நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!
'நான் தொலைக்காட்சிப் பெட்டி தரவில்​லையா?’ என்கிறார் கருணாநிதி. ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போகின்ற, வருகின்றவர்களுக்கு எல்லாம் விரட்டி விரட்டிக் கொடுத்தார். அது யாருடைய நன்மைக்காக? தன்னுடைய குடும்பத்துக்கு கேபிள் பணம் வர வேண்டும் என்பதற்காக! கேபிளை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசுடமை ஆக்கினார் அம்மா. அந்த அரசுத் தீர்மானத்தில் தன்னுடைய அன்புக்குரிய கவர்னரைக் கையெழுத்துப் போடவிடாமல் செய்தது மட்டும் அல்லாமல், அடுத்து ஆட்சி மாறியவுடன் அந்தச் சட்டத்தையே ரத்து செய்தவர் கருணாநிதி!
அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும்  மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு... தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!
அம்மாவின் காலத்தில், 12-க்கு விற்ற அரிசி இன்று 40. அம்மாவின் காலத்தில் அரிசி விற்ற விலைக்கு இன்று உப்பு விற்கிறது. டாடா உப்பு 12. கல் உப்பு
அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம் 4,500. இன்று அது 15,500! ஏழைப் பெண்கள் திருமணத்தன்று அரைப் பவுன் தாலிக்குக்கூட வக்கில்லாமல் செய்துவிட்டது கருணாநிதி அரசு. அதனால்தான் அம்மா தான் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்குவதாக வாக்கு அளித்திருக்கிறார்.
அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!
இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி. இது மத்திய அரசு அனுமதித்த கடன் தொகையைவிடக் கூடுதலானது. சிறப்பு அனுமதி பெற்று, நம்மைக் கூடுதல் கடனாளியாக்கிவிட்டார். கதை, வசனம் எழுதும் கருணாநிதியும், பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் அன்பழகனும் எந்தப் பொருளாதாரத்தை அறிவார்கள்?
ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த... ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி... தொலைய வேண்டுமா? வேண்டாமா?
மக்கள் சொல்வார்கள்!
சந்திப்பு: த.கதிரவன்
Courtesy : Junior Vikadan dated 13 04 2011 p.62-63 , Sourced from : http://unarchitamilan.blogspot.com/2011/04/blog-post_787.html

Friday, 8 April 2011

கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகிய் மூன்றிலும் ஈடுபடுவது திமுக காரர்களே: பழ நெடுமாறன் தினமணியில் சாட்டையடி விமர்சனம்

",,,,கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.,,,"


".........திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?.........."

 திமுக தலைவர் குறித்தும் திமுக கட்சிக்காரர்களின் தற்போதைய போக்குக் குறித்தும் இவ்வளவு தெளிவான, துணிவான விமர்சனங்கள் தமிழ் நாளிதழ் சூழலில் காணப்பட்டதேயில்லை. பழ நெடுமாறன் தினமணி 06 04 2011 புதன் கிழமை நாளிட்ட இதழில் "மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்", என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கப் பக்கக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருக்கும் இக்கட்டுரை பிற பத்திரிகைகளுக்கு முன்னுதாரணமான கட்டுரை என்றே சொல்ல வேண்டும். தினமலரிலோ, தினத்தந்தியிலோ, தினகரனிலோ இது போன்ற ஒரு அற்புதமான விமர்சனத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால் இக்கட்டுரை மிகவும் முக்கியமாகின்றது. 

________
தினமணியில் வெளிவந்த கட்டுரை:
________
 முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது. இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.


source : Dinamani.com