Showing posts with label இதழியல் அறம். Show all posts
Showing posts with label இதழியல் அறம். Show all posts

Saturday, 2 April 2011

தொடரும் தினமலரின் அத்துமீறிய குறும்பும் பொறுப்பற்ற போக்கும்

ஏப்ரல் முதல் நாளன்று வெளியான தினமலரின் இணைப்பான தேர்தல் களம் 2011 சப்ளிமென்ட் இதழின் முதல் பக்கத்தில்,  சமரசம்! அதிமுக கூட்டணியில் மீண்டும் வைகோ. போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு என்ற தலைப்பிட்ட ஒரு பக்க செய்தி வெளியாகியிருந்தது. உண்மை என்ன ? என்ற குறிப்புடன் 7ஆம் பக்கத்தில் வெளியான குறிப்பில், ஏப்ரல் முதல் நாளன்று இவ்வாறு யாராவது உங்களை ஏமாற்றலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இக்கட்டான நிலையிலிருக்கும் மதிமுகவை மையமாக வைத்து இப்படி ஒரு விளையாட்டான செய்தி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. என்றாலும், இது குறித்த குறிப்பு அதே இதழில் இடம் பெற்று விட்டதால் பிரச்னையில்லை.

ஆனால், இந்த செய்தியைப் படித்த வைகோ, உடன்டியாக இது குறித்த தனது கண்டனத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கை, மாலை மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தினமலரில் இந்தச் செய்தி யைக் காண முடியவில்லை.
எந்த முதல் பக்க்த்தில் குறும்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்களோ அதே முதல் பக்கத்தில், இந்த மறுப்பை வெளிய்ட்டால்தானே தினமலரின் தவறை மன்னிக்க முடியும். ஆனால், மறுப்பு அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் குப்பையில் போட்டால், இது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடல்லவா? சுதந்திரம் என்பதைத் தவறாகப் பயன்படுத்துவதாகாதா?





source Dinamalar.com 



















தினம்லரில் இடம்பெறாத அறிக்கை  
தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மாலைமலரில் வெளிவந்துள்ள செய்தி 


ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக கூறுவதா? வைகோ கண்டனம்


சென்னை, ஏப்.1-
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
 
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது.   அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
 
எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
 
கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Wednesday, 30 March 2011

விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பொதுச் சின்னம் கிடையாது : தினமலரில் செய்தி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொதுச் சின்னம் அளிப்பது தொடர்பான விஷய்த்தில் தினமலர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு  ஒருபக்கம் சார்பான தகவல்களை வெளியிட்டு வருவதை இங்கே விவாதித்து வருகின்றோம்.
30 03 2011 நாளிட்ட தினமலர் இதழில் தமிழகத் தேர்தல் தலைமை அதிகாரியை மேற்கோள் காட்டி கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, விசிக தெரிவித்த எந்தத்த்கவலையும் வெளியிடாத தினமலர், தான் தெரிவிக்க விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டுவருகின்றது. இது அறமற்ற செயலாகவே கருதப்படும்.

















Source : Dinamalar.com

Tuesday, 29 March 2011

விசிக குறித்து அவதூறு வெளியிட்ட தினமலர் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பு

கடந்த வார இறுதியில், தினமலர் இதழின் முதல் பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  தேர்தல் சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயல்வதாக ஒரு குற்றச் சாட்டு வெளியாகியிருந்தது.  அதே நாளில் தினமணியில் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி தினமணியில் வெளியான ஒரு செய்தியில், சின்னங்கள்
எப்படி  ஒதுக்கப் படுகின்றன என்று ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது.
இந்த இரு செய்திகளின் அடிப்படையில் எங்களின் ஆய்வுக்குழு, தினமல்ர் தவறாக செய்தி வெளியிட்டிருப்பதாகக் கண்டறிந்தது.
இதற்கிடையில், தொல் திருமாவளவன், தாங்கள் பொதுச் சின்னம் பெறுவதற்காக யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தியை வெளியிட்ட தினமலர், இது குறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. திருமாவளவனின் விளக்கத்தை வெளியிட்டு தனது வாசகர்களுக்கு உண்மை நிலவரத்தைப் புரியவைக்கவும் இல்லை.
தினமலர் தனது வாசகர்களை இவ்வளவு மோசமாக நடத்துவது ஏன் என்பது விளங்கவில்லை.
தெரிந்தே தவறு செய்வது, தவற்றை ஒப்புக் கொள்ள ம்றுப்பது, விளக்கம் அளிக்கப்  படும்போதுஅதனை வெளியிட மறுபப்து ஆகிய் செயல்கள், எவ்வகையில் ஏறகத்தக்கது என்பது எங்களுக்கெல்லாம் விளங்கவேயில்லை. இதை இதழியல் அடாவடித்தனம் என்று வகைப் படுத்த இயலுமா? இந்தியாவில் இது போன்ற மனப்பான்மையுடன் இயங்கும் இத்ழ்கள் வேறு உள்ளனவா? சர்வதேச ரீதியில் இது போன்றுபத்திரிகைகள் இயங்குகின்றனவா என்பவற்றைப் பேராசிரியர்கள் விளக்க வேண்டும்.
 தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தி 

பொதுச்சின்னத்தை பெறுவதற்காக
`தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' : தொல்.திருமாவளவன் பேட்டி


திட்டக்குடி, மார்ச்.28-

`விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச்சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாங்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று திட்டக்குடியில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்ற வில்லை

`விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகும். முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை பெறவே தொகுதிகளை குறிப்பிட்டு மனு செய்திருந்தோம்.

இதில் நாங்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்பு அதன் விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.

வெற்றி வாய்ப்பு

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் கூட்டணி தர்மத்தை எப்போதும் மாற மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் எங்களுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முன்பு நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தவிர வேறல்ல. இதனை தொகுதி மக்கள் தவறாக கருதவில்லை. என்னையடுத்து இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் (செல்வப்பெருந்தகை) கட்சி மாறினாரே தவிர எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.

2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடைபட்ட சில மாதங்கள்தவிர நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளோம். எனவே எங்களை அணி மாறுபவர்கள் என குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களை பழிசுமத்துவது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை.

திட்டக்குடி வேட்பாளர்

திட்டக்குடியில் தொகுதி வேட்பாளர் சிந்தனைச்செல்வன் 1986-ம் ஆண்டிலேயே இந்துவாக மீண்டும் மதம் மாறிவிட்டார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்தான். இதனால் சிந்தனைச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தவறான தகவல் எதையும் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தேர்தல் ஆணையமானது மனித உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு முறையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆணையம் மதிப்பதில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்.

மேற்கண்டவாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Source : Dailythanthi.com






Sunday, 27 March 2011

அரசியல் விவாதங்களைப் பதிவு செய்வதில் தினதந்திக்கு முதலிடம், தினமணிக்கு இரண்டாமிடம்

பொதுத்தேர்தலின் போது தங்கு தடையில்லாத அரசியல் விவாதங்களுக்கு வழிவகையேறபடுத்தும் வகையில்,
தொழில்முறையாக செய்திகளை வெளியிடுவது எந்தெந்தப் பத்திரிகைகள் என்று ஆராய்ந்தோம். வேட்புமனுத் தாக்கல் முடிந்து, பிரச்சாரங்கள் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த ஆய்வு பொருத்தமானதாக இருக்கும்.

திமுக தலைவர் தனது சாத்னைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டு, ஆறாவது முறையாகவும் முதல்வராக வாய்ப்பளிக்கக் கோரி பிரச்சாரம் செய்து வருகின்றார்.  அ இ அதிமுக தலைவி ஜெயலலிதா, திமுக அரசின் ப்லவேறு குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசுவதுடன், தான் ஆட்சிக்கு வந்தால் என்னெவெல்லாம் செய்வேன் என்பதையும் பட்டியலிட்டு வருகின்றார்.

தேமுதிக நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த், திமுக அரசை விமர்சித்தும், பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவரை விமர்சித்தும் பிரச்சாரங்கள் செய்துவருகின்றனர். இவர்கள் தவிர, திருமாவளவன், மு க ஸ்டாலின், கம்யூஸ்டு கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருகின்ற்னர்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர், சீமான், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடிப்பதே தனது நோக்கம் என்று  பிரச்சாரம் செய்து வருகின்றார். சினிமா நட்சத்திரங்களில் குஷ்பூ 2 தினங்களாக, திமுக கூட்டணியை ஆதரித்தும் பிரச்சாரம் செய்துவருகின்றார்.

இந்தத் தலைவர்களது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பேட்டிகளையும் வெளியிடுவதில், நேர்மையாகவும், பக்கஞ்சாராமலும்  இயங்குவது எந்தெந்தப் பத்திரிகைகள் எனக் கண்டறிவது நமது ஆர்வம்.

தினத்தந்தி, எல்லா தரப்பு செய்திகளையும் உள்ளடக்கிட முய்லவ்து போன்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு செய்திவாரியாக ஆராயும் போது தான், ஒவ்வொரு பத்திரிகையின் அரசியலும் புரிந்து கொள்ள முடிவதாக உள்ளது.  தினமணி, பக்கங்களின் எண்ணிக்கை காரணமாகவோ, அல்லது பிற காரணத்தாலோ, தினத்தந்தி அளவு பன்முகத்தன்மைக்கு இடம் தரமுடிவதில்லை.
தினகரன், திமுக சார்பு நிலைப்பாட்டிலேயே, குறிப்பாக, திமுக தலைவரது  குடும்பம் சார்பான நிலைப்பாட்டிலேயே செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
தினமலர், அதுவே ஒரு அரசியல் இயக்கம்போல, மிகுந்த விருப்பு வெறுப்புகளுடன், செய்திகளைத் தெரிவு செய்வதிலும், முன்னுரிமைப் படுத்துவதிலும்,  மிகுந்த பக்கச் சார்புடனே இயங்கிவருகின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் கதாநாயகி என்று வர்ணிக்க, கடந்த தேர்தலில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையை கதாநாயகன் என்றும் வர்ணிக்க, தினமலர், திடீரென வில்லன் என்று தானாகவே ஒரு சொல்லை இந்தக் கதையாடலில் அடையாளப் படுத்த முயல்கின்றது.

27 03 2011 அன்று வெளியான் தினமலர் இதழின் முதல் ப்க்கமொன்றில், மின்வெட்டை வில்லன் என்று வர்ணித்து  விவசாயிகள் மின்வெட்டால் கோபமுடன் இருப்பதாகவும், தேர்தலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் முதன்மைச் செய்தியை எழுதியுள்ளது.




\


















முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று அதிமுக தலைவர் ஜெயல்லிதா அறிவித்த செய்தியும், அதையடுத்து, திமுக தலைவர் "ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா ஏன் அதைச் செய்ய வில்லை" என்று கேட்டு திமுக தலைவர் மு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையும் முழுமையாகப் படிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு
நாளிதழாகத்தான் புரட்ட வேண்டும்.
மு கருணாநிதியின் அறிக்கையை தினத்தந்தியும், தினகரனும் மட்டுமே விரிவாக வெளியிட்டிருந்தன.  பிற எந்த இதழும், இந்த அறிக்கையைமுழுமையாகப் புரிந்து கொள்ளும் படி வெளியிடவில்லை.
தினத்தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை எப்படி வெளியிட்டன என்பது அந்தந்த நாளிதழ்களின் இணையதளத்தில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. :
 
தினமலரில் வெளிவந்த செய்தி





















தினத்தந்தியில் வெளிவந்த செய்தி

ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை?  கருணாநிதி கேள்வி
சென்னை, மார்ச்.27-  ஆட்சியில் இருந்த போது இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இடஒதுக்கீடு வழங்கவில்லை? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-

இடஒதுக்கீடு உயர்த்தி

கேள்வி:-அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

பதில்:-யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற்றுமை என்பது அண்ணாவும் காயிதேமில்லத்தும் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு. ஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களான ஈ.ஏ.அகமதுவும், காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லீம்லீக் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்துவிட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு காதர் மொய்தீனையும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனியாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு - இந்திய ïனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள்.

தேர்தலுக்காக சொல்பவர்கள்

தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை? தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது தானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய ïனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி - தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சிதான்.

இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்று எழுதப்பட்டு, படிக்கப்பட்டு அது ஏடுகளிலும் வெளி வந்துள்ளது. எனவே தேர்தலுக்காக - வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஜெயலலிதாவின் பேட்டி

இஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் - கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ``பெரும்பான்மையினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லீம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்'' என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.

23-7-2004 தேதிய "தினத்தந்தி'' நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ:-

கேள்வி:- இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?

ஜெயலலிதா:- இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!

இயலாத ஒன்று

கேள்வி:- சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயலலிதா:- முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.

ராமர் கோவில்

இதற்குப் பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் ``அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? "ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?'' என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

அரசியல் இயக்கங்கள் மீது துவேஷம் காட்டும் தினமலர்

ஒரு செய்தியைத் தனது பார்வைக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துத் திரிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதைக்  குறிப்பிடலாம்:
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக, சிறிய கட்சிகள் முயன்று கொண்டே இருப்பதும், அதற்காக தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்திருப்பதும் நாம் அறிந்தது தான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இது குறித்து விரிவாக நியதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்ட்த்தில் சில திருத்தங்களும் அறிமுகப் படுத்தப் பட்டுமுள்ளன.
2011 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனக்கென தனிச் சின்னம் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று தினமலரிலும், தினமணியிலும் இது தொடர்பான இரு செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள்தாக தினமணியின் செய்தி தெரிவிக்கின்றது. சின்னம் கோரி அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து மார்ச் 30க்குள் முடிவெடுக்கப் படும் என்றும் தினமணியின் செய்தி சொல்கின்றது (தினமணியின் செய்தி கீழே தரபட்டுள்ளது).

ஆனால், தினமலர் செய்தி, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் தந்திருப்பது போலவும், அந்தத் திருட்டுத் தனத்தைத் தான் கண்டுபிடித்து அம்பலப் படுத்திவிட்டதாகவும் முதற் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது (தினமலரில் வெளிவந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது).

தினமலரின் செய்தியின்படி,   ஒரு வேளை விசிக வின் செயலில் தவ்றிருந்தாலும், அது குறித்து விசிகவின் அமைப்பாளர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டு, தனது குற்றச் சாட்டை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்க
வேண்டாமா?  ஒருவர் மீது குற்றஞ்சாட்டும் போது, குறிப்பாக, அபாண்டமாக அவதூறு செய்யும் வகையில் செய்திகளை எழுதும்போது,  குற்றஞ்சாட்டப் படுபவரது தரப்பு நியாயத்தையும் கேட்டு அதையும் பதிவு செய்திருக்க வேண்டாமா?

எந்த நாளில் இந்தக் கோரிக்கையினை விசிக, தேர்தல் ஆணைய்ம் முன்வைத்தது. தொடக்கத்திலிருந்தே திமுக அணியில் கூடுதல் இடங்களைக் கேட்டுக் கொண்டிருந்த விசிக, தான் திட்டமிட்டபடியே, தேர்தல் ஆணையத்திடம் மனுவைக் கொடுத்து சின்னம் கோரியிருக்கலாம். திமுக தலைமை, 10 சீட்டுகளே ஒதுக்க முடியும் என்றதும் அதை விசிக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, தேர்தல் ஆணைய்ம் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய விதிகளின்படி, தகுதி பெறாத கட்சிகளுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்காமல், அவற்றைச் சுயேட்சையாகக் கருதி, ஒவ்வொரு தொகுதி வாரியாக சின்னங்களை ஒதுக்க்லாம். அப்போதும் மெழுகுவர்த்தி சின்னத்திற்கு பிற சுயேட்சைகள் போட்டியிடாத வரை, விசிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமே மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுதான் செய்தியாக வெளியிடப் பட்டிருக்க வேண்டும். தேர்தலைப் பார்வையாளராக இருந்து கவனிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே இந்தப் பிரச்னை எளிதாகப் புரியும் போது, தேர்தலில் புகுநது, தனது விருப்பு வெறுப்புகளின் படி, அரசியல் கட்சிகள் மீது துவேஷத்தைக் காட்டுவது எவ்வகையில் அறம்?
தினமலரில் வெளிவந்த செய்தி :




  
தினமணியில் வெளிவந்த செய்தி :



அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
  
சென்னை, மார்ச் 26: அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:  தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகள் ஒன்பது உள்ளன. மேலும், ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்து விட்டு அதேசமயம், அங்கீகாரம் பெறாத கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.  உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் அளிக்கப்படுகின்றன. பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் ஒரு கட்சி போட்டியிட வேண்டும்.  இதனால், அந்தக் கட்சிக்கு மோதிரம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மட்டை, பட்டம் ஆகிய சின்னங்களை கோரி இருந்தது.  விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. கூடை, தேங்காய், முரசு ஆகிய சின்னங்களை அந்தக் கட்சி கோரியிருந்தது. புதுச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கூஜா சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன், மோதிரம், மின்கம்பம் ஆகியவற்றை அந்தக் கட்சி கோரியிருந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க. அணியில் அந்தக் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  அந்தக் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன் நட்சத்திரம், மணி ஆகியவற்றை கோரியிருந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்துக்கு மின்கம்பம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு மேஜை விளக்கு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மேஜை விளக்கு, மேஜை ஆகியவற்றை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்த விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்று அனைத்து விவரங்களையும் தொகுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிட வேண்டும்.  வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தினத்துக்கு முன்பாக இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  23 தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source :Dinamani




Tuesday, 22 March 2011

வைகோவை அவமானப் படுத்த முயலும் தினமலர்

மதிமுக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று எடுத்த முடிவை, தமிழ் நாளிதழ்களிலேயே மிகவும் ஆபாசமாகவும், கொச்சைப் படுத்தியும் செய்தி வெளியிட்ட நாளிதழ் தினமலர்.
21 03 2011 திங்கள் அன்று வெளியான பதிப்பில், கீழ்க்கண்டவாறு தலைப்பிட்டிருந்தது தினமலர் :
ஓட்டம் ,
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ
இன்னும் 2 மாதங்களுக்கு எந்த அறிக்கையும் கிடையாது




தேர்தலைப் புறக்கணிக்க முடிவு
என்று தினமணியும்,





தொகுதி பங்கீடு பிரச்னையால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்
மதிமுக தேர்தல் புறக்கணிப்பு
வைகோ தலைமையில் நடந்த
கூட்டத்தில் தீர்மானம்

என்று தினத்தந்தியும்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன.
மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்து, ஒரு அரசியல் ரீதியான முடிவெடுக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவரது முடிவை இப்படி கொச்சைப்படுத்துவது எவ்வகையில் அறமாகும்?
இது வைகோவை அவமானப் படுத்துவதாகக் கருதிக் கொண்டு தன்னைத் தானே தரம் தாழுத்துவதாகாதா ? என்ற கேள்விக்ளை எழுப்பியுள்ளது இந்தத் தலைப்பும் இதையொட்டிய செய்தியும்.
ஏன் தினமலர் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதைத் தனியாகத் தான் ஆராய வேண்டும்.


Source : Dinamalar