Showing posts with label விசிக. Show all posts
Showing posts with label விசிக. Show all posts

Wednesday, 30 March 2011

விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பொதுச் சின்னம் கிடையாது : தினமலரில் செய்தி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குப் பொதுச் சின்னம் அளிப்பது தொடர்பான விஷய்த்தில் தினமலர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு  ஒருபக்கம் சார்பான தகவல்களை வெளியிட்டு வருவதை இங்கே விவாதித்து வருகின்றோம்.
30 03 2011 நாளிட்ட தினமலர் இதழில் தமிழகத் தேர்தல் தலைமை அதிகாரியை மேற்கோள் காட்டி கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, விசிக தெரிவித்த எந்தத்த்கவலையும் வெளியிடாத தினமலர், தான் தெரிவிக்க விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டுவருகின்றது. இது அறமற்ற செயலாகவே கருதப்படும்.

















Source : Dinamalar.com

Tuesday, 29 March 2011

விசிக குறித்து அவதூறு வெளியிட்ட தினமலர் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பு

கடந்த வார இறுதியில், தினமலர் இதழின் முதல் பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  தேர்தல் சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயல்வதாக ஒரு குற்றச் சாட்டு வெளியாகியிருந்தது.  அதே நாளில் தினமணியில் தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி தினமணியில் வெளியான ஒரு செய்தியில், சின்னங்கள்
எப்படி  ஒதுக்கப் படுகின்றன என்று ஒரு செய்தியும் வெளியாகியிருந்தது.
இந்த இரு செய்திகளின் அடிப்படையில் எங்களின் ஆய்வுக்குழு, தினமல்ர் தவறாக செய்தி வெளியிட்டிருப்பதாகக் கண்டறிந்தது.
இதற்கிடையில், தொல் திருமாவளவன், தாங்கள் பொதுச் சின்னம் பெறுவதற்காக யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தவறான செய்தியை வெளியிட்ட தினமலர், இது குறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. திருமாவளவனின் விளக்கத்தை வெளியிட்டு தனது வாசகர்களுக்கு உண்மை நிலவரத்தைப் புரியவைக்கவும் இல்லை.
தினமலர் தனது வாசகர்களை இவ்வளவு மோசமாக நடத்துவது ஏன் என்பது விளங்கவில்லை.
தெரிந்தே தவறு செய்வது, தவற்றை ஒப்புக் கொள்ள ம்றுப்பது, விளக்கம் அளிக்கப்  படும்போதுஅதனை வெளியிட மறுபப்து ஆகிய் செயல்கள், எவ்வகையில் ஏறகத்தக்கது என்பது எங்களுக்கெல்லாம் விளங்கவேயில்லை. இதை இதழியல் அடாவடித்தனம் என்று வகைப் படுத்த இயலுமா? இந்தியாவில் இது போன்ற மனப்பான்மையுடன் இயங்கும் இத்ழ்கள் வேறு உள்ளனவா? சர்வதேச ரீதியில் இது போன்றுபத்திரிகைகள் இயங்குகின்றனவா என்பவற்றைப் பேராசிரியர்கள் விளக்க வேண்டும்.
 தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தி 

பொதுச்சின்னத்தை பெறுவதற்காக
`தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' : தொல்.திருமாவளவன் பேட்டி


திட்டக்குடி, மார்ச்.28-

`விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச்சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தை நாங்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று திட்டக்குடியில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திட்டக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏமாற்ற வில்லை

`விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சியாகும். முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை பெறவே தொகுதிகளை குறிப்பிட்டு மனு செய்திருந்தோம்.

இதில் நாங்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்பு அதன் விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம்.

வெற்றி வாய்ப்பு

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் கூட்டணி தர்மத்தை எப்போதும் மாற மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் எங்களுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

முன்பு நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தவிர வேறல்ல. இதனை தொகுதி மக்கள் தவறாக கருதவில்லை. என்னையடுத்து இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் (செல்வப்பெருந்தகை) கட்சி மாறினாரே தவிர எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.

2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடைபட்ட சில மாதங்கள்தவிர நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளோம். எனவே எங்களை அணி மாறுபவர்கள் என குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்களை பழிசுமத்துவது பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை.

திட்டக்குடி வேட்பாளர்

திட்டக்குடியில் தொகுதி வேட்பாளர் சிந்தனைச்செல்வன் 1986-ம் ஆண்டிலேயே இந்துவாக மீண்டும் மதம் மாறிவிட்டார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள்தான். இதனால் சிந்தனைச்செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தவறான தகவல் எதையும் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

தேர்தல் ஆணையமானது மனித உரிமைகளை மீறும் வகையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு முறையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆணையம் மதிப்பதில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்.

மேற்கண்டவாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Source : Dailythanthi.com






Sunday, 27 March 2011

அரசியல் இயக்கங்கள் மீது துவேஷம் காட்டும் தினமலர்

ஒரு செய்தியைத் தனது பார்வைக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துத் திரிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதைக்  குறிப்பிடலாம்:
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்காக, சிறிய கட்சிகள் முயன்று கொண்டே இருப்பதும், அதற்காக தேர்தல் ஆணையம் பல விதிகளை விதித்திருப்பதும் நாம் அறிந்தது தான். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இது குறித்து விரிவாக நியதிகளை வகுத்துள்ளது. இந்தச் சட்ட்த்தில் சில திருத்தங்களும் அறிமுகப் படுத்தப் பட்டுமுள்ளன.
2011 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனக்கென தனிச் சின்னம் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தச் சூழலில் இன்று தினமலரிலும், தினமணியிலும் இது தொடர்பான இரு செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள்தாக தினமணியின் செய்தி தெரிவிக்கின்றது. சின்னம் கோரி அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து மார்ச் 30க்குள் முடிவெடுக்கப் படும் என்றும் தினமணியின் செய்தி சொல்கின்றது (தினமணியின் செய்தி கீழே தரபட்டுள்ளது).

ஆனால், தினமலர் செய்தி, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் தந்திருப்பது போலவும், அந்தத் திருட்டுத் தனத்தைத் தான் கண்டுபிடித்து அம்பலப் படுத்திவிட்டதாகவும் முதற் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது (தினமலரில் வெளிவந்த செய்தி கீழே தரப்பட்டுள்ளது).

தினமலரின் செய்தியின்படி,   ஒரு வேளை விசிக வின் செயலில் தவ்றிருந்தாலும், அது குறித்து விசிகவின் அமைப்பாளர்களில் ஒருவரிடம் கருத்துக் கேட்டு, தனது குற்றச் சாட்டை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்க
வேண்டாமா?  ஒருவர் மீது குற்றஞ்சாட்டும் போது, குறிப்பாக, அபாண்டமாக அவதூறு செய்யும் வகையில் செய்திகளை எழுதும்போது,  குற்றஞ்சாட்டப் படுபவரது தரப்பு நியாயத்தையும் கேட்டு அதையும் பதிவு செய்திருக்க வேண்டாமா?

எந்த நாளில் இந்தக் கோரிக்கையினை விசிக, தேர்தல் ஆணைய்ம் முன்வைத்தது. தொடக்கத்திலிருந்தே திமுக அணியில் கூடுதல் இடங்களைக் கேட்டுக் கொண்டிருந்த விசிக, தான் திட்டமிட்டபடியே, தேர்தல் ஆணையத்திடம் மனுவைக் கொடுத்து சின்னம் கோரியிருக்கலாம். திமுக தலைமை, 10 சீட்டுகளே ஒதுக்க முடியும் என்றதும் அதை விசிக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது, தேர்தல் ஆணைய்ம் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய விதிகளின்படி, தகுதி பெறாத கட்சிகளுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்காமல், அவற்றைச் சுயேட்சையாகக் கருதி, ஒவ்வொரு தொகுதி வாரியாக சின்னங்களை ஒதுக்க்லாம். அப்போதும் மெழுகுவர்த்தி சின்னத்திற்கு பிற சுயேட்சைகள் போட்டியிடாத வரை, விசிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமே மெழுகுவர்த்தி சின்னம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதுதான் செய்தியாக வெளியிடப் பட்டிருக்க வேண்டும். தேர்தலைப் பார்வையாளராக இருந்து கவனிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே இந்தப் பிரச்னை எளிதாகப் புரியும் போது, தேர்தலில் புகுநது, தனது விருப்பு வெறுப்புகளின் படி, அரசியல் கட்சிகள் மீது துவேஷத்தைக் காட்டுவது எவ்வகையில் அறம்?
தினமலரில் வெளிவந்த செய்தி :




  
தினமணியில் வெளிவந்த செய்தி :



அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
  
சென்னை, மார்ச் 26: அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:  தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகள் ஒன்பது உள்ளன. மேலும், ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்து விட்டு அதேசமயம், அங்கீகாரம் பெறாத கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.  உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சின்னங்கள் அளிக்கப்படுகின்றன. பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் ஒரு கட்சி போட்டியிட வேண்டும்.  இதனால், அந்தக் கட்சிக்கு மோதிரம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மட்டை, பட்டம் ஆகிய சின்னங்களை கோரி இருந்தது.  விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. கூடை, தேங்காய், முரசு ஆகிய சின்னங்களை அந்தக் கட்சி கோரியிருந்தது. புதுச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கூஜா சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன், மோதிரம், மின்கம்பம் ஆகியவற்றை அந்தக் கட்சி கோரியிருந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் அறிவித்து இருந்தது. ஆனால், தி.மு.க. அணியில் அந்தக் கட்சி 10 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.  அந்தக் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்துடன் நட்சத்திரம், மணி ஆகியவற்றை கோரியிருந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்துக்கு மின்கம்பம் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் மாநாட்டுக் கட்சிக்கு மேஜை விளக்கு சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி மோதிரம், மேஜை விளக்கு, மேஜை ஆகியவற்றை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்த விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெற்று அனைத்து விவரங்களையும் தொகுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிட வேண்டும்.  வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தினத்துக்கு முன்பாக இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  23 தொகுதிகளுக்கு குறைவாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது குறித்து மார்ச் 30-ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Source :Dinamani




Wednesday, 16 March 2011

கவனத்தை ஈர்த்த மூன்று செய்திகள் :

1. டெக்கன் க்ரானிக்கிளின் காங்கிரஸ் பட்டியலும் தினமணியின் காங்கிரஸ் பட்டியலும்
2.  விரல் அடையாள் மை எங்கிருந்து வருகின்றது (டைம்ஸ் ஆப் இந்தியா)
3. திருநங்கைகளுக்குக் கிடைத்துள்ள அங்கீகார வாய்ப்பு (தினமணி)


 காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளின் பட்டியலை எல்லா நாளிதழ்களுமே தான் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்தப் பட்டியல்களிலேயே இரண்டு பட்டியல்கள்  படிப்பதற்கும் ஒப்பிடுவதற்கும் வசதியாக இருந்தன. அவை: 1. தினமணி மாவட்ட வாரியாக, காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2. டெக்கன் கிரானிக்கிள் பத்திரிகை,  இந்த 63 தொகுதிகளில், எவையெவை யார் யார் வசம் இருந்தன என்று தொகுத்துப் பட்டியலிட்டுள்ளது.

காங்கிரஸின் 63 தொகுதிகள்

மாவட்ட வாரியாக காங்கிரஸýக்கு  ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்  திருவள்ளூர் : திருத்தணி,  பூந்தமல்லி (தனி), ஆவடி.  
சென்னை : திரு.வி.க. நகர் (தனி),  ராயபுரம், அண்ணா நகர்,  தியாகராய நகர்,  மயிலாப்பூர்.  
காஞ்சிபுரம் : ஆலந்தூர்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி),  மதுராந்தகம் (தனி).  
வேலூர் : சோளிங்கர், வேலூர்,  ஆம்பூர்.  
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.   
திருவண்ணாமலை : செங்கம் (தனி),  கலசப்பாக்கம், செய்யாறு.  
விழுப்புரம் : ரிஷிவந்தியம்.  
சேலம் : ஆத்தூர் (தனி),  சேலம் வடக்கு.  நாமக்கல் : திருச்செங்கோடு.  
ஈரோடு : ஈரோடு மேற்கு,  மொடக்குறிச்சி. 
நீலகிரி : உதகமண்டலம். 
 கோவை : வால்பாறை (தனி),  தொண்டாமுத்தூர்,  சிங்காநல்லூர்.  
திருப்பூர் : திருப்பூர் தெற்கு,  காங்கேயம்,  அவினாசி (தனி).  
திண்டுக்கல் : நிலக்கோட்டை (தனி),  வேடசந்தூர்.  
கரூர் : கரூர்.  
திருச்சி : மணப்பாறை, முசிறி.  
அரியலூர் : அரியலூர். 
 கடலூர் : விருத்தாசலம்.  
நாகை : மயிலாடுதுறை. 
 திருவாரூர் : திருத்துறைப்பூண்டி (தனி).  
தஞ்சாவூர் : பாபநாசம்,  பட்டுக்கோட்டை,  பேராவூரணி.  
புதுக்கோட்டை : திருமயம், அறந்தாங்கி.  
சிவகங்கை : காரைக்குடி, சிவகங்கை.  
மதுரை : மதுரை வடக்கு,  மதுரை தெற்கு,  திருப்பரங்குன்றம்.  
விருதுநகர் : விருதுநகர்.  
ராமநாதபுரம் : பரமக்குடி (தனி),  ராமநாதபுரம்.  
தூத்துக்குடி : விளாத்திக்குளம்,  ஸ்ரீவைகுண்டம்.  
திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),  கடையநல்லூர்,  நாங்குநேரி, ராதாபுரம்.  
கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,  கிள்ளியூர். 
(தருமபுரி, தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப் படவில்லை என்பது தனிச் செய்தியாக 9 ஆம் பக்கத்தில் தினமணியில் வெளியாகியுள்ளது )

பாமக போட்டியிடும் தொகுதிகள்திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.
தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம் , கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.:

Source : Dinamani website

Deccan Chronicle list 



அடுத்த செய்தி தேர்தலின் போது விரல் நகங்களில் இடப்படும் அடையாள் மை எங்கே உற்பத்தியாகிறது?   என்பதை விரிவாக விளக்குகின்றது.
1962இல் நடந்த மூன்றாவது பொதுத்தேர்தலில் இருந்து தான் விரலில் வாக்களித்ததற்கான அடையாள் மை இடும் வழக்கம் தொடங்கியது.  மைசூர் பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் என்ற் பொதுத் துறை நிறுவனம் தான் நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களுக்கான விரல் அடையாள மையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மிகவும் ரகசியமாகத் தயாரிக்கப் படும் இந்த மையை உற்பத்தியாகும் செலவு என்ன ? யார் கண்டுபிடித்தது, ஒரு தேர்தலுக்கு ஒரு மாநிலத்துக்கு எவ்வளவு மை தேவை என்பது போன்ற விரிவான தகவல்களுடன், டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்றைய இதழ் கீழ்க்கண்ட தலைப்புடன் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளது.  



State orders 1lakh vials of indelible ink 
from Mysore factory for polls 
________
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் "இதரர்' என்ற பிரிவின் கீழ் தனி அடையாளத்துடன் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், "திருநங்கைகள்' என்றழைக்கப்படும் "அரவானிகள்'. என்ற அறிமுகத்துடன் தொடங்கும் விரிவான ஒரு கட்டுரையை தினமணி 15 03 2011 அன்று 7 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விளிம்பு நிலை மனிதர்கள் குறித்து  செய்தியோ கட்டுரையோ, மைய நீரோட்ட இதழ்களில் இடம் பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிக்கும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.


முதல் முறையாகக் கிட்டியுள்ள அங்கீகார வாய்ப்பு!
திருச்சி, மார்ச் 14: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் "இதரர்' என்ற பிரிவின் கீழ் தனி அடையாளத்துடன் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், "திருநங்கைகள்' என்றழைக்கப்படும் "அரவானிகள்'.தெருக்களில் திரியும்போது படித்தவர்களும்கூட கேலி செய்து பேசி அழைக்கப்பட்ட சமூகமாக அரவானிகள் சமூகம் இருக்கிறது. இவர்களில் மிகச்சிலர் அடையாளம்கூட கண்டுகொள்ள முடியாத அளவுக்கு படித்து நல்ல பணியில் இருப்பதையும் காண முடிகிறது.தங்களுக்கென "தனி மொழி', ஜாதி, மத அடையாளமில்லாத உறவு, பழைமை மாறாத வாழ்வியல் சடங்குகளைக் கொண்டது அரவானிகள் சமூகம். இந்த நிலையில், சமூகத்தில் நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் இந்தச் சமூகத்துடன் ஒத்து வாழ வேண்டிய அவசியமும், உரிமையும் இருக்கிறது என்பது அண்மைக்காலமாக எழுந்து வரும் கோரிக்கை. இதுதொடர்பாகவே, அரவானிகள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினரைக் கொண்ட போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன.இதற்கிடையே, தமிழ்நாட்டில் இப்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க இதரர் பிரிவில் 844 அரவானிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, அடையாள அட்டையும் பெற்றுள்ளனர்.இவர்களில் சென்னையில் 292 பேரும், திருவள்ளூரில் 209 பேரும், விழுப்புரத்தில் 96 பேரும், சேலத்தில் 83 பேரும், ஈரோட்டில் 47 பேரும், திருச்சியில் 14 பேரும், திண்டுக்கல்லில் 2 பேரும், தேனியில் ஒருவரும் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க விஷயங்களும் இருக்கின்றன. மொத்த மாவட்டங்கள் 32-ல் 15 மாவட்டங்களில் இருந்துதான் இந்த வாக்காளர் பட்டியலில் அரவானிகள் இடம் பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களிலுள்ள அரவானிகளுக்கு முன்கூட்டியே இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.தமிழ்நாட்டில் ஏறத்தாழ 35 ஆயிரம் அரவானிகள் இருக்கலாம் என்று தொண்டு நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது. என்றாலும், வாரியத்தில் பதிவு செய்த அரவானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். சுமார் 3,500 பேர்தான் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த இந்த 10 சதம் பேருக்கும் வாரியத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.ஏறத்தாழ பெரும்பான்மையான எண்ணிக்கையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, குடும்ப அட்டைகள், இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சில மாவட்டங்களில் கட்டிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதுமுள்ள எண்ணிக்கையிலிருந்து வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைப்போல, தற்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.வாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என நடைபெற்ற நீண்ட விழிப்புணர்வு பிரசாரம் அதிகம். அளிக்கப்பட்ட கால இடைவெளி அதிகம். ஆனால், இத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க செய்யப்பட்ட மிகக் குறைவான பணிகளுடன் ஒப்பிடும்போது வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தவர்கள் அதிகம் என்றுதான் கணிக்க முடிகிறது.இது தொடர்பாக "ஃசேப்' அமைப்பின் தலைவி பி. கஜோல் கூறியது:"தமிழ்நாட்டில் அரவானிகள் நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, அரவானிகளைப் பற்றி மக்கள் மத்தியில் பரவலாக இருந்த எண்ணம் மாறியிருக்கிறது. அரவானிகளுக்கேகூட, தங்களுக்குரிய உரிமைகள், தங்களின் நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.இவற்றுக்கு மத்தியில், மூன்றாம் பாலினமாக அரவானிகளை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலில் இதரர் பிரிவின் கீழ் அரவானிகள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சிதான்.அதேநேரத்தில், வாக்காளர் பட்டியலில் "அரவானிகள்' என்ற பிரிவையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உரிமை கிடைத்ததாக உணர முடியும். இதற்கான நடவடிக்கையை அடுத்த தேர்தல்களில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பிவைக்கப்படும்.புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருக்கும் அரவானிகள் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். இப்போதே, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பிக் கொள்ளாமல், விருப்பமுள்ளவர்களுக்கு வாக்களிக்கலாம். அதேநேரத்தில், கட்டாயம் தங்களின் வாக்கைப் பதிவு செய்வது அவசியம்' என்றார் கஜோல்.
Source : Dinamani